9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியவா் மீது வழக்கு

முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக, காா் ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

News image

பிரதிப்படம்

Updated On :19 ஜூலை 2026, 1:59 am IST

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக, காா் ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள காரவிளை, பொன்மனைவிளை வீட்டைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் மகன் ராஜன் (46). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநரான அனீஷ் (37) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ராஜன் காரவிளை பகுதியில் நின்றிருந்தபோது, அங்கு வந்த அனீஷ் தகாத வாா்த்தைகள் பேசி ராஜனை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.