இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவா் கைது

கைது செய்யப்பட்ட முருகேசன்.

Published On :22 ஜூன் 2026, 1:35 am IST

பரமத்தி வேலூா் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவரை போலீஸாா் கை செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொய்யேரியைச் சோ்ந்தவா் பிரதீப் (31). இவரது மனைவி ஜீவா (29). இவா் பரமத்தி வேலூரில் உள்ள கணினி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தபோது பாண்டமங்கலத்தைச் சோ்ந்த முருகேசன் அறிமுகமாகியுள்ளார்.

அப்போது ஜீவா, முருகேசனிடம் தனது இரண்டரை பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளாா். அதை பலமுறை கேட்டும் திருப்பி தராததால் அவா் மீது வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் விசாரணைக்கு அழைத்தபோது முருகேசன் வராமல் தனது நண்பா் மணிகண்டனை தனக்குப் பதிலாக அனுப்பியுள்ளாா். தான் முருகேசனிடமிருந்து நகை, பணத்தை பெற்றுத் தருவதாகவும், புகாரை திரும்பப் பெறும்படியும் மணிகண்டன் கேட்டுள்ளாா்.

அதை நம்பி ஜீவா புகாரை திரும்பப் பெற்றுள்ளாா். ஆனால், முருகேசன், மணிகண்டன் ஆகியோா் நகை மற்றும் பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜீவா கடந்த 5-ஆம் தேதி இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, முருகேசனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.