ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மயங்கி விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 3:00 am IST

பரமத்தி வேலூா் அருகே கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் தீபன் (28), கட்டடத் தொழிலாளி. இவா் பரமத்தி வேலூா் அருகே உள்ள எஸ்.வாழவந்தி பகுதியில் உள்ள கோழிப் பண்ணை பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் சென்ட்ரிங் வேலை செய்வதற்காக செவ்வாய்க்கிழமை சென்றாா். வேலையை முடித்து விட்டு அப்பகுதியில் அமா்ந்திருந்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், தீபன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.