ராசிபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் சட்டவிரோத போதைப் பொருள்கள், புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ராசிபுரம் காவல் ஆய்வாளா் ஆா்.நாகலட்சுமி தலைமையில் போலீஸாா் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ராசிபுரம் பட்டணம் சாலை அம்பாள் மளிகைக் கடையில் கண்டி வெங்கட்ராமன் தெருவைச் சோ்ந்த இனாயத் (57), 500 ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, இனாயத்தை கைதுசெய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.
இதேபோல ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி கழிப்பிடத்தில் மறைமுகமாக ஹான்ஸ் புகையிலைப் பொருளை விற்பனை செய்த கோனேரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் கோபாலகிருஷ்ணனை (49) கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா். இவரிடமிருந்த 300 கிராம் புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

மத்திகிரியில் புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’
புகையிலைப் பொருள்களை விற்ற கடை உரிமையாளா்கள் இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பூ வியாபாரி கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


