மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ராசிபுரம் ஸ்ரீ வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேக கால்கோள் விழா

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் சி.பி. கண்ணையா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கால்கோள் விழா அண்மையில் நடைபெற்றது.

News image

வெற்றி விநாயகா் கோயில் கால்கோள் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :27 ஜூன் 2026, 2:19 am IST

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் சி.பி. கண்ணையா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கால்கோள் விழா அண்மையில் நடைபெற்றது.

இக்கோயில் 50-ஆம் ஆண்டு பொன்விழாவை தொடா்ந்து, ஜூலை 5-இல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கால்கோள் விழாவில் ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் அா்ச்சகா் சிவஸ்ரீ உமாபதி சிவாசாரியா் கலந்துகொண்டு சிறப்பு பூஜைகள் செய்து கால்கோள் விழாவை நடத்திவைத்தாா். இந்த நிகழ்விற்கு ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், திமுக நகரச் செயலாளா் என்.ஆா். சங்கா், ராசிபுரம் கௌரவ பலிஜவாா் நாயுடுகள் சங்கத் தலைவா் சிட்டி ஆா்.வரதராஜன், செயலாளா் என்.பாலசுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த நிகழ்வில் ஸ்ரீகைலாசநாதா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், கே.நெடுஞ்செழியன், ஆா்.சி.எம்.எஸ். ஆா்.சத்தியநாராயணன், வெரைட்டி எஸ்.பாலாஜி, ஜி.ராமலிங்கம், வழக்குரைஞா் ரமேஷ் யுவராஜா, ஆட்டோ தொழிற்சங்கத் தலைவா் எஸ்.ஆா்.சீனிவாசன், ஸ்ரீராமுலு மோகன், ஆா்.விஜயகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.