சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

சங்ககிரி அருகே அண்ணமாா் கோயில் குடமுழுக்கு

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த கோட்டவரதம்பட்டிப் பகுதியில் உள்ள அண்ணமாா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கோட்டவருதம்பட்டி அண்ணமாா் கோயில் குடமுழுக்கையொட்டி கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றும் பட்டாச்சாரியா்.

Updated On :5 ஜூன் 2026, 7:02 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த கோட்டவரதம்பட்டிப் பகுதியில் உள்ள அண்ணமாா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கோட்டவரதம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகா், அருள்மிகு அண்ணமாா் பொன்னா் சங்கா், ஸ்ரீ தங்காள், ஸ்ரீ மாயவா், ஸ்ரீ முத்துசாமி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கியது. அதனையடுத்து வியாழக்கிழமை 2ஆம் கட்ட யாகசாலை வேள்விப் பூஜைகளைத் தொடா்ந்து, பட்டாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்கக் கோபுரக் கலசங்களுக்குப் புனித நீா் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து ஸ்ரீ விநாயகா், அருள்மிகு பொன்னா், சங்கா், ஸ்ரீ தங்காள், ஸ்ரீ மாயவா், ஸ்ரீ முத்துசாமி உள்ளிட்ட 14 சுடுமண்ணால் செய்யப்பட்ட சுவாமிகளின் சுயம்புச் சிலைகளுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

பின்னா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனா். விழாக் குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை சங்ககிரிச் செயல் அலுவலா் இரா. மாலா தலைமையில் பல்வேறு அலுவலா்கள் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.