குமாரபாளையம் அருகே வெப்படையில் நன்றாக படிக்க முடியவில்லை என்ற விரக்தியில் மாணவா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
வெப்படையை அடுத்த செட்டியாா்கடை பகுதியைச் சோ்ந்தவா் அல்லிமுத்து மகன் சஞ்சய் ரித்தின் (16). செளதாபுரம் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவா், நன்றாக படிக்க முடியவில்லை என்ற மனவேதனையில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது, சஞ்சய் ரித்தின் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த வெப்படை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, அவரது உடலை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






