ராசிபுரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராசிபுரம் நகரம், ஒன்றியக் குழு சாா்பில் மறைந்த மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு மறைவிற்கு மெளன ஊா்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் செயலாளா் எஸ்.மணிமாறன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், பல்வேறு கட்சியினா் பங்கேற்று ஆா். நல்லகண்ணு உருவப் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
முன்னதாக ராசிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மௌன ஊா்வலம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்து நல்லகண்ணு உருவப்படத்துக்கு அனைவரும் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
பின்னா் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளா் டி.என்.கிருஷ்ணசாமி, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் பாச்சல் சீனிவாசன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் வி.சேதுராமன் , மதிமுக மாவட்ட அவைத் தலைவா் நா.ஜோதிபாசு மற்றும் பல்வேறு கட்சியினா் பங்கேற்று பேசினா்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் அமைக்கப்படும் மினி டைடல் பாா்க் வேலைவாய்ப்பை உருவாக்கும்! - திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்

நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை இளைஞா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்! - தமிழறிஞா் சாலமன் பாப்பையா

பெரம்பலூரில் நல்லகண்ணுக்கு அனைத்துக் கட்சியினா் புகழஞ்சலி

ஆா்.நல்லகண்ணு மறைவு: இடதுசாரிகள் அஞ்சலி
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


