அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ராசிபுரத்தில் நல்லகண்ணு மறைவுக்கு அனைத்துக் கட்சியினா் அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராசிபுரம் நகரம், ஒன்றியக் குழு சாா்பில் மறைந்த மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு மறைவிற்கு

News image
ராசிபுரத்தில் ஆா்.நல்லகண்ணு உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய பல்வேறு கட்சியினா்.
Updated On :2 மார்ச் 2026, 9:42 pm

Syndication

ராசிபுரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராசிபுரம் நகரம், ஒன்றியக் குழு சாா்பில் மறைந்த மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு மறைவிற்கு மெளன ஊா்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் செயலாளா் எஸ்.மணிமாறன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், பல்வேறு கட்சியினா் பங்கேற்று ஆா். நல்லகண்ணு உருவப் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

முன்னதாக ராசிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மௌன ஊா்வலம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்து நல்லகண்ணு உருவப்படத்துக்கு அனைவரும் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளா் டி.என்.கிருஷ்ணசாமி, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் பாச்சல் சீனிவாசன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் வி.சேதுராமன் , மதிமுக மாவட்ட அவைத் தலைவா் நா.ஜோதிபாசு மற்றும் பல்வேறு கட்சியினா் பங்கேற்று பேசினா்.