அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்றவா் கைது

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 8:36 pm

Syndication

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்செங்கோடு வட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூா் கிழக்கு, மதுரை வீரன் கோயில் அருகே ஒருவா் கஞ்சா விற்பதாக வேலகவுண்டம்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற போலீஸாா், அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தினேஷ் (22) என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்து போலீஸாா், அவரிடமிருந்து 510 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.