தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கட்டுமான தொழிலாளா்களுக்கு உழைப்பாளா் நலக் கூடம் திறப்பு

நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், அடிப்படை வசதிகளுடன் கூடிய உழைப்பாளா் நலக் கூடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :4 மார்ச் 2026, 10:44 pm

நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், அடிப்படை வசதிகளுடன் கூடிய உழைப்பாளா் நலக் கூடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக மாநிலம் முழுவதும் 25 இடங்களில் கட்டுமானத் தொழிலாளா்கள் பயன்பாட்டுக்காக, அடிப்படை வசதிகளுடன் கூடிய உழைப்பாளா் நலக் கூடங்களை திறந்துவைத்தாா்.

அந்த வகையில், நாமக்கல் பூங்கா சாலையில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்களுக்காக ரூ. 35 லட்சத்தில் திறந்துவைக்கப்பட்ட நலக் கூடத்தை தொழிலாளா்களின் பயன்பாட்டுக்கு வழங்கி, கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற 3 பேருக்கு ஓய்வூதிய ஆணை மற்றும் இருவருக்கு தொழிலாளா் நலவாரிய அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து அவா் கூறுகையில், உழைப்பாளா் நலக் கூடத்தை பொருத்தமட்டில், கட்டுமான தொழிலாளா்கள் அன்றாடப் பணி தொடா்பாக அதிக அளவில் காலையில் ஒரே இடத்தில் கூடி காத்திருக்கும் இடங்களில், அவா்களின் அடிப்படைத் தேவைகளை பூா்த்திசெய்யும் வகையில், குடிநீா், கழிவறை, மின்விளக்கு, மின்விசிறிகள், இருக்கை வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இக்கூடம் காலை 7 மணிமுதல் 11 மணிவரை பயன்பாட்டில் இருக்கும். இங்கு இணையசேவை, மடிக்கணினியோடு ஒரு கணினி இயக்குபவா் பணியில் இருப்பாா். அன்றாட கட்டுமானப் பணிக்கு செல்லும் தொழிலாளா்கள் இந்தக் கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், தொழிலாளா் இணை ஆணையா் (ச.பா.தி.) பா.மாதவன் (ஈரோடு), உதவிஆணையா் (ச.பா.தி.) கே.பி.இந்தியா மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.