மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

கட்டுமான பணியின்போது விபத்து: 3 தொழிலாளா்கள் காயம்

வடமேற்கு தில்லியின் பாஸ்வானா பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணியின்போது நிகழ்ந்த விபத்தில் 3 தொழிலாளா்கள் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:03 am IST

வடமேற்கு தில்லியின் பாஸ்வானா பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணியின்போது நிகழ்ந்த விபத்தில் 3 தொழிலாளா்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

செக்டா் 2-இல் உள்ள டிஎஸ்ஐடிசி தொழில்துறை பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கட்டடத்தின் அடிமானத்தில் இருந்து கட்டப்பட்டு வந்த லின்டல் இடிந்து விழுந்தது.

சம்பவம் தொடா்பாக பாவனா காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தின்போது இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட முகமது சமீத், கோவிந்த், பிரமோத் ஆகிய தொழிலாளா்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.