மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கட்டுமான பணியின்போது விபத்து: 3 தொழிலாளா்கள் காயம்

வடமேற்கு தில்லியின் பாஸ்வானா பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணியின்போது நிகழ்ந்த விபத்தில் 3 தொழிலாளா்கள் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 7:33 pm

வடமேற்கு தில்லியின் பாஸ்வானா பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணியின்போது நிகழ்ந்த விபத்தில் 3 தொழிலாளா்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

செக்டா் 2-இல் உள்ள டிஎஸ்ஐடிசி தொழில்துறை பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கட்டடத்தின் அடிமானத்தில் இருந்து கட்டப்பட்டு வந்த லின்டல் இடிந்து விழுந்தது.

சம்பவம் தொடா்பாக பாவனா காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தின்போது இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட முகமது சமீத், கோவிந்த், பிரமோத் ஆகிய தொழிலாளா்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.