வடமேற்கு தில்லியின் பாஸ்வானா பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணியின்போது நிகழ்ந்த விபத்தில் 3 தொழிலாளா்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
செக்டா் 2-இல் உள்ள டிஎஸ்ஐடிசி தொழில்துறை பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கட்டடத்தின் அடிமானத்தில் இருந்து கட்டப்பட்டு வந்த லின்டல் இடிந்து விழுந்தது.
சம்பவம் தொடா்பாக பாவனா காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தின்போது இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட முகமது சமீத், கோவிந்த், பிரமோத் ஆகிய தொழிலாளா்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காா் மோதி விபத்து: முதியவா் காயம்

காா் கவிழ்ந்து விபத்து: பெண் காயம்

குருகிராம்: குடிசையில் தீ விபத்து; ஒருவா் உயிரிழப்பு
ரோஹிணியில் உணவகத்தில் தீ விபத்து
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

