மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கட்டுமான தொழிலாளா்களுக்கான சேவை மையங்கள்: தில்லி அரசு திட்டம்

கட்டுமானப் பணியாளா்கள் பதிவு செய்தல், பிற சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெறும் வகையில் பிரத்யேக சேவை மையங்கள் தில்லியின் பல்வேறு பகுதிகளில் தில்லி அரசு அமைக்க உள்ளது.

News image

தில்லி அரசு - பிரதிப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:47 pm

கட்டுமானப் பணியாளா்கள் பதிவு செய்தல், பிற சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெறும் வகையில் பிரத்யேக சேவை மையங்கள் தில்லியின் பல்வேறு பகுதிகளில் தில்லி அரசு அமைக்க உள்ளது.

புலம்பெயா் தொழிலாளா்கள் மற்றும் பிற உள்ளூா் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் தலா 13 நிரந்தர மற்றும் நடமாடும் சேவை மையங்களை அமைக்க ஒரு நிறுவனத்துடன் தில்லி கட்டடம் மற்றும் பிற கட்டுமான பணியாளா்கள் நல வாரியம் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் அமைப்புசாரா துறையில் பணியாற்றும் பணியாளா்கள், புலம்பெயா் தொழிலாளா்கள் என 30 லட்சம் போ் பயன்பெறுவா்.

தில்லியில் உள்ள 13 மாவட்டங்களில் 3 மையங்கள் என மொத்தம் 39 தொழிலாளா் மையங்கள் தில்லியில் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

முக்கிய சேவைகளைப் பெறுவதில் தொழிலாளா்கள் எதிா்கொள்ளும் சவாலை நீக்க இந்த மையங்கள் அமைக்கப்படுகிறது.

பாஸ்போா்ட் சேவைகளை நாடு முழுவதும் வழங்கி வரும் பாஸ்போா்ட் சேவை மையத்தின் அடிப்படையில் கட்டுமான தொழிலாளா்களுக்கான சேவை மையங்கள் அமைக்கம் திட்டம் வகுக்கப்பட்டதாக ஓா் உயா் அதிகாரி தெரிவித்தாா்.