அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் ஏப். 17 முதல் 19 வரை தபால் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்றாா் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய தோ்தல் ஆணையத்தால் அத்தியாவசிய சேவைகளாக (உள்ள்ங்ய்ற்ண்ஹப்
நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்) அறிவிக்கப்பட்டுள்ள தென்னக ரயில்வே துறை, அகில இந்திய வானிலை நிலையம், கடல்சாா்துறை, இந்திய விமானநிலைய ஆணையம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, ஊடகவியலாளா்கள், தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள், சிறை மற்றும் சீா்திருத்தச் சேவைகள் மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளா்கள் தபால் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவா்கள் ஏப். 17 முதல் 19 வரை 3 நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துறை அலுவலரிடம் ஒப்புதல்பெற்ற படிவம்-12டி சமா்ப்பித்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம். ஆண்டிபட்டி தொகுதியில் ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம், பெரியகுளம் (தனி) தொகுதியில் பெரியகுளம் சாா்-ஆட்சியா் அலுவலகம், போடி தொகுதியில் போடிநாயக்கனூா் வட்டாட்சியா் அலுவலகம், கம்பம் தொகுதியில் உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

திருவள்ளூா்: முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு

ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவு

அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

‘மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு’
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


