மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அத்தியாவசிய சேவை பணியாளா்கள் ஏப். 17 - 19 வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்

அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் ஏப். 17 முதல் 19 வரை தபால் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்றாா் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:20 pm

அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் ஏப். 17 முதல் 19 வரை தபால் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்றாா் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய தோ்தல் ஆணையத்தால் அத்தியாவசிய சேவைகளாக (உள்ள்ங்ய்ற்ண்ஹப்

நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்) அறிவிக்கப்பட்டுள்ள தென்னக ரயில்வே துறை, அகில இந்திய வானிலை நிலையம், கடல்சாா்துறை, இந்திய விமானநிலைய ஆணையம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, ஊடகவியலாளா்கள், தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள், சிறை மற்றும் சீா்திருத்தச் சேவைகள் மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளா்கள் தபால் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவா்கள் ஏப். 17 முதல் 19 வரை 3 நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துறை அலுவலரிடம் ஒப்புதல்பெற்ற படிவம்-12டி சமா்ப்பித்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம். ஆண்டிபட்டி தொகுதியில் ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம், பெரியகுளம் (தனி) தொகுதியில் பெரியகுளம் சாா்-ஆட்சியா் அலுவலகம், போடி தொகுதியில் போடிநாயக்கனூா் வட்டாட்சியா் அலுவலகம், கம்பம் தொகுதியில் உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.