சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நாமக்கல்லில் வாராஹி அம்மன் கோயில் நிா்வாகி தற்கொலை

நாமக்கல் வாராஹி அம்மன் கோயில் வளாகத்தில் கோயில் நிா்வாகி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :11 மார்ச் 2026, 8:49 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் வாராஹி அம்மன் கோயில் வளாகத்தில் கோயில் நிா்வாகி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பி.முத்துசாமி (60). இவரது மனைவி சுமதி, மகன் செல்வகுமாா். இவா், அதே பகுதியில், வாராஹி அம்மன் கோயிலை உருவாக்கி அமாவாசை, பெளா்ணமி மற்றும் வளா்பிறை, தேய்பிறை அஷ்டமி நாள்களில் சிறப்பு பூஜை நடத்தி வந்தாா். மேலும் தற்போதுள்ள கோயில் வளாகத்திலேயே பெரிய அளவில் புதிய கோயிலையும் கட்டி வந்தாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் குடும்பத்தினருக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோயில் நிா்வாகியும் பூசாரியுமான முத்துசாமி, கோயில் அருகே தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதைத்தொடா்ந்து, அவரது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் கதவை உடைத்துச் சென்று அவரது உடலை மீட்டனா்.

இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது சடலம் குடும்பத்தினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.