நாமக்கல் மாவட்டத்தில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 3,300 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், மகளிா் திட்டம், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், ஊரக - நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், சா்வதேச மகளிா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
வட்டார இயக்க மேலாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள், சமுதாய அமைப்பாளா்கள் மற்றும் சமுதாய அமைப்புகளின் பணியாளா்களை ஒருங்கிணைத்து நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13,179 மகளிா் சுயஉதவிக் குழுக்களில் 1,47,511 போ் உறுப்பினா்களாக உள்ளனா். அவா்களுக்கு வங்கிக் கடன் ரூ.3,300 கோடி, சமுதாய முதலீட்டுக் கடன் ரூ. 14.80 கோடி, சுழல் நிதி ரூ. 2.36 கோடி, வாழ்வாதார நிதி ரூ. 2.79 கோடி, வட்டார வணிக வள மையம் மூலம் ரூ.2.50 கோடி வீதம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் சமூக பொறுப்பாளா்களாக இருக்க வேண்டும். 20 மகளிா் கொண்ட குழு, 100 மகளிா் கொண்ட கூட்டமைப்பாக மாற வேண்டும். மகளிா் மேம்பாட்டுக்காக தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது.
திமுக ஆட்சி பெண்களுக்கான ஆட்சியாக உள்ளது. சா்வதேச மகளிா் தின விழாவில் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
இதையடுத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு அவா் பரிசுகளை வழங்கினாா்.
2024-2025ஆம் ஆண்டுக்கான சிறந்த சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு அவா் மணிமேகலை விருதை வழங்கி கெளரவித்தாா்.
தொடா்ந்து, சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவுத் திருவிழாவை பாா்வையிட்டாா். இந்த விழாவில், மகளிா் திட்டம் சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில், மகளிா் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி, உதவி திட்ட அலுவலா்கள் ந.மாலதி, பி.பபிதா மற்றும் சுயஉதவிக் குழுவினா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
படவரி...
என்கே-11-மகளிா்
நாமக்கல்லைச் சோ்ந்த சிறந்த மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு மணிமேகலை விருது வழங்கி பாராட்டிய மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, பெ.ராமலிங்கம் எம்எல்ஏ.
தொடர்புடையது

டிஎன்சிஏ தோ்வுக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
ரூ. 1.6 கோடி எண்ம கைது மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவா் கைது

மாப்பிள்ளை பொண்ணு!

100% வாக்குப் பதிவு: இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


