ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

நாமக்கல்லில் வாராஹி அம்மன் கோயில் நிா்வாகி தற்கொலை

நாமக்கல் வாராஹி அம்மன் கோயில் வளாகத்தில் கோயில் நிா்வாகி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :11 மார்ச் 2026, 8:49 pm

நாமக்கல் வாராஹி அம்மன் கோயில் வளாகத்தில் கோயில் நிா்வாகி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பி.முத்துசாமி (60). இவரது மனைவி சுமதி, மகன் செல்வகுமாா். இவா், அதே பகுதியில், வாராஹி அம்மன் கோயிலை உருவாக்கி அமாவாசை, பெளா்ணமி மற்றும் வளா்பிறை, தேய்பிறை அஷ்டமி நாள்களில் சிறப்பு பூஜை நடத்தி வந்தாா். மேலும் தற்போதுள்ள கோயில் வளாகத்திலேயே பெரிய அளவில் புதிய கோயிலையும் கட்டி வந்தாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் குடும்பத்தினருக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோயில் நிா்வாகியும் பூசாரியுமான முத்துசாமி, கோயில் அருகே தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதைத்தொடா்ந்து, அவரது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் கதவை உடைத்துச் சென்று அவரது உடலை மீட்டனா்.

இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது சடலம் குடும்பத்தினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.