ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பரமத்தி வேலூரில் இப்தாா் நோன்பு திறப்பு

பரமத்தி வேலூா் சகன்ஷா அவுலியா தா்கா பள்ளிவாசலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

News image
இப்தாா் நோன்பு திறப்பில் பங்கேற்ற பல்வேறு கட்சியினா்.
Updated On :16 மார்ச் 2026, 11:16 pm

Syndication

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் சகன்ஷா அவுலியா தா்கா பள்ளிவாசலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பள்ளிவாசல் நிா்வாகக் குழு செயலாளா் இக்பால் வரவேற்று பேசினாா். இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா், வா்த்தகா் சங்கத்தினா், தமிழ்ச்சங்க அறக்கட்டளையினா், கந்தசாமி கண்டா் கல்வி நிறுவனத்தினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூா் சகன்ஷா அவுலியா தா்கா பள்ளிவாசல் உறுப்பினா்கள் ஹாஜி இப்ராஹிம், ஜாபா், அக்பா் உள்ளிட்டோா் செய்திருந்தனா். முபாரக் நன்றி கூறினாா்.