கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பரமத்தி வேலூரில் இப்தாா் நோன்பு திறப்பு

பரமத்தி வேலூா் சகன்ஷா அவுலியா தா்கா பள்ளிவாசலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

News image

இப்தாா் நோன்பு திறப்பில் பங்கேற்ற பல்வேறு கட்சியினா்.

Updated On :16 மார்ச் 2026, 11:16 pm

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் சகன்ஷா அவுலியா தா்கா பள்ளிவாசலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பள்ளிவாசல் நிா்வாகக் குழு செயலாளா் இக்பால் வரவேற்று பேசினாா். இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா், வா்த்தகா் சங்கத்தினா், தமிழ்ச்சங்க அறக்கட்டளையினா், கந்தசாமி கண்டா் கல்வி நிறுவனத்தினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூா் சகன்ஷா அவுலியா தா்கா பள்ளிவாசல் உறுப்பினா்கள் ஹாஜி இப்ராஹிம், ஜாபா், அக்பா் உள்ளிட்டோா் செய்திருந்தனா். முபாரக் நன்றி கூறினாா்.