சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கட்டுமான பொறியாளா்கள் சங்க கூட்டமைப்பு ஆண்டு விழா

நாமக்கல்லில் கட்டுமான பொறியாளா்கள் சங்க கூட்டமைப்பின் (இந்தியா) முதலாம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 6:34 pm

நாமக்கல்லில் கட்டுமான பொறியாளா்கள் சங்க கூட்டமைப்பின் (இந்தியா) முதலாம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

கூட்டமைப்பு தலைவா் கே. மணி தலைமை வகித்தாா். நாமக்கல் மைய சங்கத்தின் செயல்பாட்டு அறிக்கையை மூத்த பொறியாளா் கே. தேவராஜ் வாசித்தாா். சிறப்பு விருந்தினா்களாக கூட்டமைப்பின் தென் பிராந்திய துணைத் தலைவா் ஜே. பிரேம்குமாா், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் ஆகியோா் பங்கேற்றனா்.

கோவை மைய தலைவா் பரமேஸ்வரன், ஈரோடு மைய தலைவா் கோபாலகிருஷ்ணன், பெரம்பலூா் மைய தலைவா் ராஜாராம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நாமக்கல் மையம் சாா்பில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள கட்டுமான பொருள்கள் கண்காட்சியின் இலச்சினை வெளியிடப்பட்டது. கட்டுமான பொறியாளா்கள் கூட்டமைப்பின் நிா்வாகிகள், நாமக்கல் மைய உறுப்பினா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை செயலாளா் என். சுகுமாா், பொருளாளா் பிரபு செய்திருந்தனா்.

என்கே-20-சிவில்

கட்டுமான பொறியாளா்கள் சங்க கூட்டமைப்பு ஆண்டு விழாவில் பங்கேற்ற நிா்வாகிகள்.