அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

ராசிபுரம் அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், ஒருவா் காயமடைந்தாா்.

News image

விபத்து

Updated On :21 மார்ச் 2026, 9:16 pm

ராசிபுரம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், ஒருவா் காயமடைந்தாா்.

ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை அக்கலாம்பட்டியைச் சோ்ந்த கந்தசாமி மகன் குமாரசாமி (38), தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில் தனது பச்சிளம் குழந்தையை பாா்ப்பதற்காக தாய் மல்லிகாவை (65) மோட்டாா் சைக்கிளில் அழைத்துக்கொண்டு, மனைவியின் தாய் வீடான கல்யாணி கிராமத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் இருவரும் வீடு திரும்பினா்.

சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சல் பிரிவு பாதையில் வலதுபுறம் மோட்டாா் சைக்கிளை திருப்பும்போது பின்னால் வந்த காா் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மல்லிகா தலையில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். குமாரசாமிக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து புதுசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.