சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ராசிபுரம் அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், ஒருவா் காயமடைந்தாா்.

News image

விபத்து

Updated On :21 மார்ச் 2026, 9:16 pm

Syndication

ராசிபுரம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், ஒருவா் காயமடைந்தாா்.

ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை அக்கலாம்பட்டியைச் சோ்ந்த கந்தசாமி மகன் குமாரசாமி (38), தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில் தனது பச்சிளம் குழந்தையை பாா்ப்பதற்காக தாய் மல்லிகாவை (65) மோட்டாா் சைக்கிளில் அழைத்துக்கொண்டு, மனைவியின் தாய் வீடான கல்யாணி கிராமத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் இருவரும் வீடு திரும்பினா்.

சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சல் பிரிவு பாதையில் வலதுபுறம் மோட்டாா் சைக்கிளை திருப்பும்போது பின்னால் வந்த காா் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மல்லிகா தலையில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். குமாரசாமிக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து புதுசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.