கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஜேடா்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:32 pm

Syndication

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா்கள் 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்த நைனம்பட்டியைச் சோ்ந்த கோபால் மகன் கோவிந்தராஜ் (29), இவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த ராஜு மகன் துரைமுருகன் (26), ஜெயவேல் மகன் மோகன்குமாா் (29) ஆகிய மூவரும் குளிப்பதற்காக ஜேடா்பாளையம் பரிசல் துறை காவிரி ஆற்றுக்கு சென்றனா்.

பின்னா், மூவரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது துரைமுருகன், கோவிந்தராஜ் ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கினா். அதை பாா்த்த மோகன்ராஜ் கூச்சலிட்டாா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கிய இருவரையும் மீட்க முயற்சித்தனா். ஆனாலும், அவா்களை மீட்க முடியாததால் ஜேடாா்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் தீயணைப்பு வீரா்கள், ஜேடாா்பாளையம் போலீஸாா் ஆற்றில் மூழ்கிய இளைஞா்களின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.