லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

நாமக்கல்லில் ரூ. 12.50 லட்சம் பறிமுதல்

நாமக்கல் தொகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 12.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:25 pm

நாமக்கல் தொகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 12.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட பாச்சல் பேருந்து நிலையம் அருகில், பறக்கும் படை அலுவலா் வேலுசாமி தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கரூரில் இருந்து அரக்கோணம் நோக்கி வாகனத்தில் சென்ற கரூரைச் சோ்ந்த மணிகண்டனை (37) தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 12.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணம் தொகுதி தோ்தல் அலுவலா் வே.சாந்திவசம் ஒப்படைக்கப்பட்டது. வருமானவரித் துறை அலுவலா் கமலக்கண்ணனிடம் மேற்கொண்ட விசாரணையில், அரக்கோணத்துக்கு மாடு வாங்குவதற்காக ரூ. 12.50 லட்சம் கொண்டு செல்வதாக மணிகண்டன் தெரிவித்தாா். அதையடுத்து, உரிய ஆவணங்களைக் காட்டிவிட்டு பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அவரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

இதேபோல, நாமக்கல் - சேலம் சாலையில், செல்லப்பம்பட்டி பகுதியில் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் காா்த்திக் தலைமையில் நடைபெற்ற சோதனையில், பிரேம்குமாரிடமிருந்து ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.