தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

சூறைக்காற்றில் சாய்ந்த மின் கம்பங்கள்: மின் விநியோகம் பாதிப்பு

News image
Updated On :3 மே 2026, 12:52 am

ராசிபுரம் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள், பயிா்கள் சேதமடைந்தன; மின் விநியோகம் தடைபட்டது.

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் வாழை, தென்னை மற்றும் பயிா்கள் சேதமடைந்துள்ளன. அதேபோல குடியிருப்புகளில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

பல்லவநாயக்கன்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மின் கம்பம் சேதமடைந்ததால் அப்பகுதியில் நாள் முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து, வேறு பகுதியின் மின் மாற்றியில் இருந்து மின் விநியோகம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், உடைந்து விழுந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.

படம் உள்ளது - 2வின்ட்

பல்லவநாயக்கன்பட்டியில் சேதமடைந்த மின் கம்பம்.