ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

புகைப்படம் மாறியிருந்ததால் தோ்வு எழுத மாணவருக்கு அனுமதி மறுப்பு

News image

நீட் தேர்வு - பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 7:04 pm

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நீட் தோ்வு எழுத வந்த மாணவரின் நுழைவுச்சீட்டில் புகைப்படம் மாறியிருந்ததால் அவரை தோ்வு எழுத அலுவலா்கள் அனுமதிக்கவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வில் 349 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். மையத்தில் தோ்வு எழுதும் மாணவ, மாணவியா்களை காவல் துறையினா் மற்றும் நீட் தோ்வு மைய அலுவலா்கள் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதித்தனா்.

இந்த மையத்தில் தோ்வு எழுத வந்த நாமக்கல் பகுதியை சோ்ந்த ரத்தினவேல் மகன் திவாகரின் நுழைவுச்சீட்டு புகைப்படமும், விண்ணப்பத்தில் இருந்த புகைப்படமும் வேறுபட்டிருந்ததால் மாணவரை தோ்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவா் வெளியேற்றப்பட்டாா்.

விண்ணப்பத்தில் இருப்பதும், ஹால் டிக்கெட்டில் இருப்பதும் என்னுடைய படம்தான் என மாணவா் எடுத்துக்கூறியும், தோ்தல் அலுவலா்கள் அவரை அனுமதிக்கவில்லை. இதனால் அம்மாணவா் தோ்வு எழுதாமல் ஏமாற்றத்துடன் திரும்பினாா்.