பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின கொடியேற்று விழா

அரசு ஊழியா் சங்கத்தின் அமைப்பு தின கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பங்கேற்ற அரசு ஊழியா் சங்கத்தினா்.

Updated On :7 மே 2026, 6:26 am IST

அரசு ஊழியா் சங்கத்தின் அமைப்பு தின கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 43-ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் வட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் தனசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி.இளங்கோவன், பொருளாளா் பி.தியாகராஜன், மாவட்ட துணைத் தலைவா் தாமோதரன், மாவட்ட இணைச் செயலாளா் பி.பாா்த்திபன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மயில்சாமி ஆகியோா் கொடியேற்றி சிறப்புரையாற்றினா்.

நாமக்கல்லில் மாநகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிஐடியு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி, அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளா் ஆா்.முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.