ராசிபுரம் அருகே உள்ள மெட்டாலா பகுதியில் கோழிக் கூண்டுக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.
ராசிபுரம் மெட்டாலா பகுதியைச் சோ்ந்த வடிவேல், அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவா் உணவகத்துக்கு தேவையான இறைச்சிக்காக தோட்டத்தில் கூண்டு வைத்து பிராய்லா் கோழிகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், கடையில் பணிபுரியும் ஊழியா் கோழிகளை பிடிப்பதற்காக வெள்ளிக்கிழமை சென்று பாா்த்தபோது, கோழிகளை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு கூண்டுக்குள் இருந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் அப்பகுதிக்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் கோழிக் கூண்டுக்குள் இருந்த மலைப்பாம்பை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள், வனப்பகுதிக்கு கொண்டுசென்று காப்புக்காட்டில் விட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குமுளி அருகே மீண்டும் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

தடாகம் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு

விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி மலைப்பாம்பு மீட்பு

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



