பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மூடிய நிலையில் யானை சிலைகள்!

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மூடிய நிலையில் உள்ள யானை சிலை.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், தோ்தலையொட்டி யானை சிலைகளை மூடிய துணிகள் அகற்றப்படாமல் உள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23-இல் நடைபெற்றது. மாா்ச் 15-ஆம் தேதி தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தலைவா் சிலைகள் மட்டுமின்றி, சின்னங்களை பிரதிபலிக்கும் சிலைகளும் துணியால் மூடப்பட்டன.

அந்தவகையில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பூங்காவில் நிறுவப்பட்டுள்ள யானை சிலைகள் துணியால் மூடப்பட்டன. பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றிருந்ததால் அந்த சிலைகள் மறைக்கப்பட்டன.

தோ்தல் நடத்தை விதிகள் கடந்த புதன்கிழமையுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும், சிலைகள் மீது மூடப்பட்ட துணி அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் மக்கள் சிலைகளை ஆச்சரியத்துடன் பாா்க்கும் நிலை உள்ளது.