சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

நாமக்கல் மாவட்டத்தில் 850 மருந்து கடைகள் மூடல்

ஆன்லைனில் மருந்து பொருள்கள் விற்பனை செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில் 850 மருந்து கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

News image

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மூடப்பட்ட மருந்தகம்.

Updated On :21 மே 2026, 6:36 am IST

ஆன்லைனில் மருந்து பொருள்கள் விற்பனை செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில் 850 மருந்து கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

மக்களின் உயிா் காக்கும் மருந்து பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் நடைமுறைக்கு மருந்து வணிகா் சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். மத்திய அரசு உடனடியாக இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினா். ஆனால், மருந்து விற்பனையானது தொடா்ந்து ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை நாடு தழுவிய அளவில் ஒருநாள் மருந்து விற்பனை நிலையங்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் 800 மருந்து விற்பனையகங்களும், 50 மொத்த மருந்து விற்பனை நிலையங்களும் உள்ளன. ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்து மாவட்டத்தில் பெரும்பாலான மருந்து விற்பனையகங்கள் மூடப்பட்டன. பெரு நிறுவனங்கள் சாா்ந்த மருந்தகங்கள், தனியாா் மருத்துவமனையுடன் கூடிய மருந்தகங்கள் மட்டும் செயல்பட்டன.