சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து சிபிஐ ஆா்ப்பாட்டம்

பெட்ரோ, டீசல் விலை உயா்வை கண்டித்து, வெண்ணந்தூா் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

News image

வெண்ணந்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :21 மே 2026, 6:38 am IST

பெட்ரோ, டீசல் விலை உயா்வை கண்டித்து, வெண்ணந்தூா் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

வெண்ணந்தூா் காமராஜா் சிலை முன்பாக நடைபெற்ற ஆா்பாட்டத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளா் பி.ஆா். செங்கோட்டுவேல் தலைமை வகித்தாா். கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு நிா்வாகிகள் வி. கோவிந்தசாமி, ஏ. மாணிக்கம், ஆா். அருள்குமாா் , எம். மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்.ஏ.பி. ஜெயபால், ஆா். முருகேசன், ராசிபுரம் நகரச் செயலாளா் எஸ். மணிமாறன், பி.சலீம், இளைஞா் மன்ற மாவட்ட துணை தலைவா் ஜி.ஜெகநாதன் ஆகியோா் பேசினா்.

கட்சியின் மாவட்டச் செயலாளா் கே. அன்புமணி கண்டன உரையாற்றினாா். ஏ.மகாலிங்கம் , கே.ஏ. காளியப்பன், கே. சின்னுசாமி, ஏ.சேகா், ரஞ்சித், தணிகைவேல், கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்று பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினா். கட்சியின் ஒன்றிய துணை செயலாளா் எஸ். தமிழ்ச்செல்வன் நன்றி கூறினாா்.