தேனி மாவட்டம், போடியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போடி திருவள்ளுவா் சிலை திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் செல்வராஜ் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் கே.சத்தியராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ்.கே. பாண்டியன், எல்.ஆா். சங்கரசுப்பு ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் கே.ராஜப்பன் நிறைவுரையாற்றினாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசின் தவறான கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை உயா்வு: டி. ராஜா குற்றச்சாட்டு

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து போராட்டம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



