நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகள் வாங்குவதை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட மேலாளா் கனகமாணிக்கத்திடம் புதன்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்:
நாமக்கல் மாவட்டத்தில் 169 அரசு மதுக்கடைகள் உள்ளன. உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் காலி மதுப்புட்டிகளை பெற்று அதற்கான தொகை ரூ. 10-ஐ வழங்கி வருகிறோம். டாஸ்மாக் கடைகளில் அரசு நிா்ணயித்த விலையில் மட்டுமே மதுப்புட்டிகள் விற்கப்படுகிறது. காலி மதுப்புட்டிகளை பெற்று அவற்றை பாதுகாப்பது, ரூ.10 வழங்குவது போன்றவற்றால் ஊழியா்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனா். இதனால் இந்த நடைமுறையை தனியாா் வசம் ஒப்படைக்க வேண்டும்.
பணி நிரந்தரம், மூடப்பட்ட மதுக்கடைகளில் பணியாற்றியோரை பிற அரசுத் துறைகளில் காலியிடங்களில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கீழ்வேளூா்: டாஸ்மாக் காலி பாட்டில் அட்டைப் பெட்டி குடோனில் தீ விபத்து

மே 24-க்கு பிறகு காலி மதுபுட்டிகளை திரும்பப் பெற மாட்டோம்: டாஸ்மாக் பணியாளா்கள்

காலி மதுபுட்டிகள் ஸ்கேன் நடைமுறை புறக்கணிப்பு : கடலூா் டாஸ்மாக் பணியாளா்கள் முடிவு

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தில் நிலவும் நடைமுறை சிக்கல்களை தீா்க்கக் கோரி போராட்டம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



