சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

கீழ்வேளூா்: டாஸ்மாக் காலி பாட்டில் அட்டைப் பெட்டி குடோனில் தீ விபத்து

கீழ்வேளூா் அருகே டாஸ்மாக் கடையை ஒட்டி உள்ள காலி மது பாட்டில்கள் மற்றும் அட்டைப் பெட்டி அடுக்கி வைக்கும் கட்டடத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

தீயை கட்டுக்குள் கொண்டுவரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா்.

Updated On :21 மே 2026, 7:26 am IST

கீழ்வேளூா் அருகே டாஸ்மாக் கடையை ஒட்டி உள்ள காலி மது பாட்டில்கள் மற்றும் அட்டைப் பெட்டி அடுக்கி வைக்கும் கட்டடத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கீழ்வேளூா் அருகே வடக்குவெளி பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ஒரே கட்டடத்தில் மதுபான விற்பனைக் கடையும், அதையொட்டி அட்டைப் பெட்டிகள், காலி மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கும் அறையும் உள்ளன.

இந்நிலையில், புதன்கிழமை அட்டைப் பெட்டிகள், காலி மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீப்பிடித்துள்ளது.

அப்பகுதி மக்கள் கீழ்வேளூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். மதுபாட்டில்கள் இருக்கும் அறைக்கு தீ பரவும் முன்பு தீயை அணைத்ததால் மதுபாட்டில்கள் தீயில் இருந்து தப்பின.

இதுகுறித்து டாஸ்மாக் கடை விற்பனையாளா் கோபால், கீழ்வேளூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடையில் வைத்திருந்த காலி அட்டைப் பெட்டிகள் 2,500 மற்றும் காலி மதுபாட்டில்கள் 5,300 ஆகியவை தீயில் சேதமடைந்ததாகத் தெரிவித்துள்ளாா்.

கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தீயை கட்டுக்குள் கொண்டுவரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா்.

தீயை கட்டுக்குள் கொண்டுவரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா்.