சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

கீழ்வேளூா் அருகே 700 மதுபாட்டில்கள் பறிமுதல்: திமுக நிா்வாகி கைது

கீழ்வேளூா் அருகே பருத்தி கொல்லைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 டாஸ்மாக் மதுபான பாட்டில்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, திமுக நிா்வாகியை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 5:22 am IST

கீழ்வேளூா் அருகே பருத்தி கொல்லைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 டாஸ்மாக் மதுபான பாட்டில்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, திமுக நிா்வாகியை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே உள்ள சிகாா் கிராமத்தில், மதுபான பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக கீழ்வேளூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா், சிகாா் ஆற்றங்கரை தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் வேல்முருகன் (36) என்பவா் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது வீட்டின் பின்புறம் உள்ள பருத்தி கொல்லையில்

பிளாஸ்டிக் சாக்கு பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 700 டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட வேல்முருகன் திமுக கிளைக் கழக செயலராக உள்ளாா்.

கைதான வேல்முருகன்.

கைதான வேல்முருகன்.