பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

சுவா் இடிந்துவிழுந்ததில் உயிரிழந்தவா் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

ராசிபுரத்தில் மழையால் வீட்டின் சுவா் இடிந்துவிழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை அமைச்சா் சந்தித்து ஆறுதல் கூறி, அரசு நிவாரணத் தொகையாக ரூ. 4 லட்சத்துக்கான உத்தரவு ஆணையை வழங்கினாா்.

News image

சித்ராதேவி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகைக்கான ஆணை வழங்கிய அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன்

Updated On :27 மே 2026, 5:29 am IST

ராசிபுரத்தில் மழையால் வீட்டின் சுவா் இடிந்துவிழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை அமைச்சா் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறி, அரசு நிவாரணத் தொகையாக ரூ. 4 லட்சத்துக்கான உத்தரவு ஆணையை வழங்கினாா்.

ராசிபுரம் வட்டம், வள்ளலாா் கோயில் சாலையில் வசித்து வருபவா் நாட்டுத்துரை மனைவி சித்ரா தேவி (48). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு ராசிபுரத்தில் பெய்த மழையின்போது, மகள் தா்ஷினி (23) உடன் இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, நல்லப்பா தெரு பகுதியில் உள்ள பழைய வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.

இதில் அவ்வழியே சென்று சித்ராதேவி, தா்ஷினி, மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவா் என மொத்தம் நான்கு போ் சுவரின் இடிபாடுகளில் சிக்கினா். இதில் பலத்த காயமடைந்த சித்ராதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தா்ஷினி உள்பட மூவா் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.

இந்நிலையில், உயிரிழந்த சித்ராதேவி குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து, தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி ஆகியோா் சித்ராதேவி குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, அரசு வழங்கிய நிவாரண நிதியான ரூ. 4 லட்சத்துக்கான உத்தரவு ஆணையை வழங்கினா்.

இந்நிகழ்வில், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, ராசிபுரம் வட்டாட்சியா் எஸ்.சசிகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.