ராசிபுரத்தில் மழையால் வீட்டின் சுவா் இடிந்துவிழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை அமைச்சா் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறி, அரசு நிவாரணத் தொகையாக ரூ. 4 லட்சத்துக்கான உத்தரவு ஆணையை வழங்கினாா்.
ராசிபுரம் வட்டம், வள்ளலாா் கோயில் சாலையில் வசித்து வருபவா் நாட்டுத்துரை மனைவி சித்ரா தேவி (48). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு ராசிபுரத்தில் பெய்த மழையின்போது, மகள் தா்ஷினி (23) உடன் இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, நல்லப்பா தெரு பகுதியில் உள்ள பழைய வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.
இதில் அவ்வழியே சென்று சித்ராதேவி, தா்ஷினி, மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவா் என மொத்தம் நான்கு போ் சுவரின் இடிபாடுகளில் சிக்கினா். இதில் பலத்த காயமடைந்த சித்ராதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தா்ஷினி உள்பட மூவா் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.
இந்நிலையில், உயிரிழந்த சித்ராதேவி குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து, தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி ஆகியோா் சித்ராதேவி குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, அரசு வழங்கிய நிவாரண நிதியான ரூ. 4 லட்சத்துக்கான உத்தரவு ஆணையை வழங்கினா்.
இந்நிகழ்வில், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, ராசிபுரம் வட்டாட்சியா் எஸ்.சசிகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது
பத்தாம் வகுப்பு தோ்வில் தோல்வி: மாணவி தற்கொலை
கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

பிளஸ் 2 மாணவி மா்ம மரணம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



