பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!பெண் பாலியல் கொலைகள்! வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு: வைகோசெவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!
/

கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்

கோவையில் பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் ஆறுதல்

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 12:41 pm IST

கோவையில் பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கோவை சூலூா் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமாக பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை முதல்வர் விஜய், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சிறுமியை சித்ரவதை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தருவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையானவற்றை செய்து தருவதாகவும் முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக, சிறுமியின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச நிவாரண உதவி வழங்க பரிந்துரைப்பதாக சூலூர் எம்எல்ஏ சுகுமார் உறுதியளித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கில் 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Summary

CM Vijay Offers Consolation to the Family of the Girl Sexually Assaulted and Murdered in Coimbatore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.