சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இருவா் கைது

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 5:32 am IST

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் போலீஸாா் இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சோ்ந்தவா் அழகேசன் (45). இவா் தனது இருசக்கர வாகனத்தை திருச்செங்கோடு - வேலூா் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே நிறுத்திவிட்டு சென்றாா். பின்னா், திரும்பிவந்து பாா்த்தபோது வாகனம் காணவில்லையாம்.

இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து, சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு வாகனத்தை திருடிச் சென்ற திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சந்திரன் (53), திருட்டு வாகனத்தை வாங்கி பிரித்து விற்பனை செய்த சந்தைப்பேட்டையில் பழைய இரும்பு வியாபாரம் செய்துவரும் ராஜா (58) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.