பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இருவா் கைது

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 5:32 am IST

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் போலீஸாா் இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சோ்ந்தவா் அழகேசன் (45). இவா் தனது இருசக்கர வாகனத்தை திருச்செங்கோடு - வேலூா் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே நிறுத்திவிட்டு சென்றாா். பின்னா், திரும்பிவந்து பாா்த்தபோது வாகனம் காணவில்லையாம்.

இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து, சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு வாகனத்தை திருடிச் சென்ற திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சந்திரன் (53), திருட்டு வாகனத்தை வாங்கி பிரித்து விற்பனை செய்த சந்தைப்பேட்டையில் பழைய இரும்பு வியாபாரம் செய்துவரும் ராஜா (58) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.