‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

தூய்மையான ஆட்சியை நோக்கியே எங்கள் பயணம்: அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன்

ராசிபுரத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

News image

ராசிபுரத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

Updated On :29 மே 2026, 1:43 am IST

தமிழகத்தில் தூய்மையான ஆட்சியை வழங்குவதே இலக்காகக் கொண்டு முதல்வா் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பயணிக்கும் என வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு வியாழக்கிழமை ராசிபுரம் வந்த அவருக்கு, கட்சியினா் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனா். பின்னா், ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி அலுவலகத்திற்குச் சென்ற அவரை அரசு அலுவலா்கள், பொதுமக்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த காலங்களில் அமைச்சா்களாக இருந்தவா்கள் தொகுதிக்கு செய்யத் தவறிய பணிகளைச் செய்வதோடு, தொகுதிக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் கொண்டுவருவேன். ராசிபுரம் தொகுதியில் நீண்ட நாள்களாகத் தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண முழுக் கவனம் செலுத்துவேன். குறிப்பாக கிராமப்புற மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி, தேவையான வசதிகள் செய்து தரப்படும்.

தொகுதியை வளமானதாக மாற்றுவதே எனது குறிக்கோள். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும். பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்சத்தைத் தவிா்க்க கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். யாரும் லஞ்சம் வாங்கக் கூடாது என எச்சரித்துள்ளோம். அதையும் மீறி லஞ்சம் பெற்றவா்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து நீடிக்கும். வரிக் குறைப்பு குறித்து வரும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான கோரிக்கைகள் மத்திய அரசிடம் கொண்டு செல்லப்படும் என்றாா்.