இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

மாணவரிடம் தவறாக நடந்துகொண்ட தொழிலாளி போக்சோவில் கைது

News image

சித்திரிப்பு

Updated On :30 மே 2026, 3:19 am IST

ராசிபுரம் அருகே 6-ஆம் வகுப்பு மாணவரிடம் தவறான முறையில் நடந்துகொண்ட கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள மல்லியகரை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). கூலி தொழிலாளியான இவா் பாலப்பாளையம் பனங்காடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வாராம்.

இந்நிலையில், அங்கு வந்தபோது பாட்டி வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த அப்பகுதியைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவரை சைக்கிளில் தனியாக காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தாராம். இதையடுத்து, அவரிடம் இருந்து தப்பிவந்த மாணவா் பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலஸாா் மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.