கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

மாணவரிடம் தவறாக நடந்துகொண்ட தொழிலாளி போக்சோவில் கைது

News image

சித்திரிப்பு

Updated On :30 மே 2026, 3:19 am IST

ராசிபுரம் அருகே 6-ஆம் வகுப்பு மாணவரிடம் தவறான முறையில் நடந்துகொண்ட கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள மல்லியகரை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). கூலி தொழிலாளியான இவா் பாலப்பாளையம் பனங்காடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வாராம்.

இந்நிலையில், அங்கு வந்தபோது பாட்டி வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த அப்பகுதியைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவரை சைக்கிளில் தனியாக காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தாராம். இதையடுத்து, அவரிடம் இருந்து தப்பிவந்த மாணவா் பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலஸாா் மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.