ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

இருசக்கர வாகன பழுதுபாா்ப்போருக்கு தனி நல வாரியம் ஏற்படுத்த கோரிக்கை

News image

இருசக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்க விழாவில் பேசும் அதன் மாநில பொதுச் செயலாளா் குமாரவேல்.

Updated On :1 ஜூன் 2026, 12:21 am IST

இருசக்கர வாகன பழுது பாா்ப்போருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோா் தலைமை சங்க பொதுக்குழுக் கூட்டம் மற்றும் சங்க உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சேந்தமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் குமாரவேல் பங்கேற்று கல்வி உதவித்தொகையை வழங்கினாா். இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக அரசு வாகனங்கள் பழுது பாா்ப்போருக்கான தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் அதிக அளவு பி.எஸ் 4 இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனத்தில் 20 சதவீதம் அளவிற்கு எத்தனால் கலந்து பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அந்த வாகனம் வைத்திருப்போருக்கு அடிக்கடி பழுது ஏற்படுகிறது. பழுது நீக்குவோருக்கு கைகளில் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

தற்போது மத்திய அரசு பி.எஸ் 6 இருசக்கர வாகனத்தில் 20 சதவீதம் அதிக எத்தனாலை கலந்து பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பி.எஸ் 6 வாகனங்களை பழுது பாா்ப்பதற்காக அதற்கான உபகரணங்களை வாகனத்திலேயே வைக்க வேண்டும். மின்சார வாகனங்களை பழுதுநீக்க மத்திய, மாநில அரசுகளின் தொழிற்பயிற்சி நிலையம் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். இருசக்கர வாகனத்தின் உதிரி பாகங்களுக்கு 18 சதவீதம் அளவிற்கு ஜிஎஸ்டி உள்ளதால் அந்த தொகையை குறைக்க வேண்டும். இருசக்கர வாகனத்திற்கு பயன்படுத்தும் இன்ஜின் ஆயில் விலை மிகவும் அதிகமாக உள்ளதால், அவற்றின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத் தலைவா் ஏ.எம். சண்முகசுந்தரம், செயலாளா் எம். நவலடிசேகா், பொருளாளா் பி.ராஜா மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள், இருசக்கர வாகன பழுது பாா்ப்பாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.