சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வாழப்பாடியில் ரூ.40 லட்சத்தில் இணைப்புச் சாலை அமைப்பு

வாழப்பாடியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ரூ.40 லட்சத்துக்கு இணைப்புச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால்,  வாழப்பாடி மற்றும்  சுற்றுப்புற கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 1:49 am

DIN

வாழப்பாடியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ரூ.40 லட்சத்துக்கு இணைப்புச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால்,  வாழப்பாடி மற்றும்  சுற்றுப்புற கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி பேரூராட்சி அமைந்துள்ளது.  சேலம் மாவட்டத்தை,  நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தோடு இணைக்கும் வாழப்பாடி -  தம்மம்பட்டி சாலையில்,   புதுப்பாளையம் அருகே  சேலம் - சென்னை தேசிய புறவழிச்சாலை  குறுக்கிடுகிறது.
சேலம்  - சென்னை தேசிய நெடுஞ்சாலையை,  தம்மம்பட்டி சாலையோடு இணைப்பதற்கு சாலை அமைக்கப்படாததால், தம்மம்பட்டி மற்றும் மங்களபுரம் சாலையில் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும்  வாழப்பாடி நகருக்குள் சென்று வந்தன. அதனால்,  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, வாழப்பாடி பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல வழியின்றி தவித்து வந்தனர். எனவே, வாழப்பாடி பகுதி மக்களின் நலன்கருதியும்,  போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், புறவழிச்சாலையின் வடபுறம்,  சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின்  ரூ. 10 லட்சம் பங்களிப்புடன்,  2015 - 16 தன்னிறைவு திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சம் செலவில் இணைப்புச்சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து புறவழிச்சாலையின் தென்புறமும் இணைப்புச்சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். தேசிய நெடுஞ்சாலைத் துறையும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியதால், சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் ரூ. 13.50 லட்சம் நிதியுதவியுடன்,  2016 - 17 தன்னிறைவு திட்டத்தின் கீழ், ரூ.40 லட்சம் செலவில், 215 மீட்டர் தூரத்திற்கு இணைப்புச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதனால், வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களும், வாகன ஓட்டுநர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.