சங்ககிரி, சந்தைப்பேட்டை அருள்மிகு செல்லியம்மன், புத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி மார்ச் 29-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது.
சங்ககிரி, சந்தைப்பேட்டை செல்லியம்மன், புத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பூச்சொரிதல், கும்பம் வைத்தல் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா தொடங்கியது. இதையடுத்து தினசரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்களுடன் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
மார்ச் 27-ஆம் தேதி இரவு சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், 28-ஆம் தேதி அக்னி, பூங்கரங்கள் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வருதல், அன்று இரவு முப்பாட்டு தீபம் எடுத்தல், 29-ஆம் தேதி சேத்து முட்டி எடுத்துப் பொங்கல் வைத்தல் வைபம் நடைபெற உள்ளன. 30-ஆம் தேதி பூ அள்ளிக் கிணற்றில் விடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

