காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஓமலூரில் த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது .
கையெழுத்துக்கு இயக்கத்துக்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் கரு.வெ.சுசீந்திரகுமார் தலைமை வகித்தார்.
வட்டாரத் தலைவர் ஓ.சி.ராஜேந்திரன் வரவேற்றார். இளைஞரணி மாநில பொதுச்செயலர் எஸ்.ரகுநந்தகுமார், இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் ஞானசேகரன், மாவட்ட துணைத் தலைவர்கள் கிருஷ்ணராஜ், செல்வமணிஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் காவிரி நீரைப் பெற்றுத் தராமலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஓமலூர் பேருந்து நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்த கட்டமாக ரயில் மறியல், உண்ணாவிரதம், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை போன்ற தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், அனைத்து கட்சிகள் அமைப்புகள் நடத்தும் போராட்டத்தில் பங்குபெறுவோம் என்றும் மாவட்டத் தலைவர் சுசீந்திரகுமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல் இலவசப் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


