காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வியாழக்கிழமை நடைபெறும் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவுக் கோரி ஆத்தூரில் அனைத்துக் கட்சியினர் புதன்கிழமை மாலை ஊர்வலமாகச் சென்றனர்.
பொதுவேலை நிறுத்தத்துக்கு வணிகர்கள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து திமுக நகரச் செயலர் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் உடையார்பாளையம் காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் மாவட்ட இலக்கிய அணி செயலர் முல்லை பன்னீர்செல்வம், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் அ.ராஜசேகர், எம்.வேலுமணி, நூத்தப்பூரார் துரை உடையார், மாணவரணி பர்கத் அலி, நகர காங்கிரஸ் தலைவர் எல்.முருகேசன், மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி, சித்தமலை, ஜி.பாஸ்கர்,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெரியசாமி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் டி.வானவில் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டு ஆதரவு திரட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

வாய்ப்புகள் தேடிவரும் கடக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 07)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 7 2026) 12 ராசிகளுக்கும்! பொருளாதார நிலை மேம்படும்!





