வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு திரட்டி கட்சியினர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வியாழக்கிழமை நடைபெறும்  பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவுக் கோரி ஆத்தூரில் அனைத்துக் கட்சியினர் புதன்கிழமை மாலை ஊர்வலமாகச் சென்றனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:09 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வியாழக்கிழமை நடைபெறும்  பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவுக் கோரி ஆத்தூரில் அனைத்துக் கட்சியினர் புதன்கிழமை மாலை ஊர்வலமாகச் சென்றனர்.
பொதுவேலை நிறுத்தத்துக்கு வணிகர்கள்,  பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து திமுக நகரச் செயலர் கே.பாலசுப்ரமணியம் தலைமையில்  உடையார்பாளையம் காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் மாவட்ட இலக்கிய அணி செயலர் முல்லை பன்னீர்செல்வம், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் அ.ராஜசேகர், எம்.வேலுமணி, நூத்தப்பூரார் துரை உடையார், மாணவரணி பர்கத் அலி, நகர காங்கிரஸ் தலைவர் எல்.முருகேசன், மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி, சித்தமலை, ஜி.பாஸ்கர்,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெரியசாமி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் டி.வானவில் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டு ஆதரவு திரட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.