சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி, சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள அவரது நினைவுச் சின்னத்துக்கு அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக அரசு சார்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு சங்ககிரி அருகே உள்ள ஈரோடு பிரிவு சாலையில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவரது பிறந்த நாளையொட்டி நினைவுச்சின்னம் அமைக்கப்பட்ட இடத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் படத்துக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சங்ககிரி எஸ்.ராஜா, வீரபாண்டி பி.மனோன்மணி, மேட்டூர் எஸ்.செம்மலை ஆகியோர் மரியாதை
செலுத்தினர்.
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகன், வட்டாட்சியர் கே.அருள்குமார், அதிமுக ஒன்றியச் செயலர் என்எம்எஸ்.மணி, நகரச் செயலர் ஆர்.செல்லப்பன், முன்னாள் தொகுதி கழகச் செயலர் வி.ஆர்.ராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 17,258 கோடி லாபம் ஈட்டிய ஹெச்பிசிஎல்!!

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: 3 அறிமுக வீரர்களுடன் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! ராஜஸ்தான் பாஜக நிர்வாகி கைது!

கடந்த 4 ஆண்டுகளாக இபிஎஸ் செய்த ஒரே வேலை நீக்குவதுதான்: சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
