/

ஓமலூர் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: கல்லூரி மாணவர் கைது 

ஓமலூர் அருகே ஐந்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கல்லூரி மாணவரை ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:43 am IST

ஓமலூர் அருகே ஐந்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கல்லூரி மாணவரை ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்தவர் ராமன் மகன் ராஜா (21). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ஜலகண்டாபுரத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
 இந்த பேன்சி ஸ்டோரில் அவ்வப்போது ராஜா வியாபாரம் செய்வது வழக்கம். இந்நிலையில், அடுத்த தெருவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு சாக்லேட் மற்றும் தின்பண்டங்கள் கொடுத்து பழகி
 வந்துள்ளார்.
 இந்த நிலையில், கடையில் யாருமில்லாத நேரத்தில் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி சத்தம்போட்டு கதறி அழுதுள்ளார். இதனால், பதறிபோன பெற்றோர்கள் ஓடிவந்து சிறுமியை மீட்டனர். அப்போது, ராஜா தன்னிடம் தவறாக நடந்துகொண்டது குறித்து அந்த சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார்.
 இதையடுத்து ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதன் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார் ராஜாவை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.