சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

எடப்பாடியில் பேருந்து கண்ணாடி உடைப்பு

எடப்பாடி மற்றும் சுற்றுப் பகுதியில் தி.மு.க.வினர் கருணாநிதி உருவப் படத்துக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

எடப்பாடி மற்றும் சுற்றுப் பகுதியில் தி.மு.க.வினர் கருணாநிதி உருவப் படத்துக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி - கொங்கணாபுரம் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு  தி.மு.க.வினர் திடீரென சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடிஅடுத்த கேட்டுக் கடை பகுதியில் தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் பதற்றமான  சூழல் நிலவியதால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. வெளியூர் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமமடைந்தனர். இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நகரில் அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. எடப்பாடி பேருந்து நிலையம் ஆள்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. 
நகரின் பல பகுதிகளில் கூடுதலான எண்ணிக்கையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது எடப்பாடி சுற்றுப் பகுதியில் கோயில் பண்டிகை நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.