FOLLOW US

ON GOOGLE DISCOVER

பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

ஒரே ஆண்டில் இரண்டு ரூ. 200 கோடி வசூல் திரைப்படங்களைக் கொடுத்த சூர்யா!

நடிகர் சூர்யா அடுத்தடுத்து பெரிய வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார்...

Published On :24 ஆகஸ்ட் 2026, 12:14 pm IST

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படமும் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்திற்குக் கிடைத்த நல்ல விமர்சனங்களால் தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஜாலியான கமர்சியல் குடும்பத் திரைப்படமாகவும் அதே நேரம் உணர்வுப்பூர்வமாக இதன் கதை எழுதப்பட்டிருந்ததால், இப்படம் இதுவரை உலக அளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்த கருப்பு திரைப்படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ. 340 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

இதனால், சில ஆண்டுகளாக திரையரங்கில் பெரிய ஹிட் இல்லாமல் இருந்த சூர்யா, ஒரே ஆண்டில் அடுத்தடுத்து இரண்டு ரூ. 200 கோடிக்கும் அதிகமான வசூல் திரைப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் வலுவான மார்க்கெட் உள்ள நடிகராகியுள்ளார்.

இந்த தீபாவளிக்கு சூர்யாவின் 47-வது திரைப்படம் வெளியாகி அதுவும் வெற்றியைப் பெற்றால் சூர்யா ஹாட்ரிக் வெற்றியைப் பெறுவார்.

Actor Suriya's film Viswanath and Sons has also grossed over ₹200 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.