உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல் எவ்வளவு?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல் குறித்து...

News image
Updated On :16 ஆகஸ்ட் 2026, 10:18 am IST

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் முதல்நாள் முதல் காட்சியைக் கண்டனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல குடும்பத் திரைப்படம் என்கிற விமர்சனங்களை அதிகம் பெற்று வருவதால் இப்படமும் சூர்யாவுக்கு வெற்றிப்படமாக அமையவுள்ளது.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் இரண்டு நாள் வசூலாக ரூ. 75 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அமெரிக்காவில் விரைவாக 1 மில்லியன் டாலர்களைக் கடந்த முதல் சூர்யா திரைப்படம் என்கிற என்கிற சாதனையையும் படைத்துள்ளது.

இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஞாயிறு முடிவில் ரூ. 100 கோடி வசூலைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Details regarding the box office collection of actor Suriya's film Viswanath and Sons have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.