உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை பெற்றுத் தரக் கோரி ஆர்ப்பாட்டம்

சேலத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :7 ஜூன் 2018, 9:51 am IST

சேலத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி நடந்தது.
 இதுதொடர்பாக அதன் உரிமையாளர் சிவகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
 இதனிடையே ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தால், புகாரை வாங்க மறுப்பதாகத் தெரிகிறது.
 இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ.மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமாருக்கு ஆதரவாகச் செயல்படும் காவல்துறையினரை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.